குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் இனி “ஜெய் பாரத்” என்று தான் கூற வேண்டும்: பாஜத அரசு அதிரடி

குஜராத் பள்ளிகளில் வருகையை உறுதி செய்ய ஆசிரியர்கள் அழைக்கும் போது, இனி உள்ளேன் அய்யா என்பதற்கு பதிலாக, ஜெய் பாரத் என்று தான் சொல்ல வேண்டும் என மாநிலத்தின் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநில கல்வித்துறை அமைச்சர் புபேந்திரசின் சுடாசமா இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார். வழக்கமாக ஆங்கிலத்தில் பள்ளி மாணவர்கள் யெஸ் சார் எனக் கூறி வந்துள்ளனர். இனி அதற்குப் பதிலாக ஜெய் பாரத் அல்லது ஜெய் ஹிந்த் என கூற வேண்டும் என குஜராத் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.