வெயில்காரணமாக வாக்குபதிவு நேரத்தை மாற்றவது குறித்து பரிசீலக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரும் மனுக்களை பரிசீலித்து முடிவு செய்ய ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

வெயில்காரணமாக மக்களவை தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகளை காலை 5 மணிக்கு தொடங்கலாமே என்று பொதுநல வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ரம்ஜான் மாதத்தில் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு பதில் 5 மணிக்கே தொடங்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அனல் காற்று வீசுவதை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவை மாற்ற இயலுமா எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.