ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அனைவரும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அனத்து அரசு, தனியார் நூலகங்கள் நாளை முதல் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டு கொண்டார் முதல்வர் பழனிசாமி.