தி.நகரில் சீர்மிகு சாலை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

சென்னை தியாகராயர் நகரில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சுமார் 59 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய நடைபதை மற்றும் சாலையை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்…

சென்னையில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் தியாகராய நகர் பாண்டிபஜார் சாலை. இந்த சாலை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன வசதிகளோடு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

39 கோடியே 86 லட்சம் மதிப்பில் நடைபாதை வளாகம், 19 கோடியே 11 லட்சம் மதிப்பிலான இந்த சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பாண்டி பசார் சாலையின் இரு புறங்களிலும் எண்ணற்ற துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், உணவகங்கள் உள்ளது.

அங்கு வரும் மக்கள் கொண்டு வரும் பைக்குகள் மற்றும் கார்கள் இந்த சாலையில் பார்க்கிங் செய்யப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் பாண்டி பசார் சாலையில் பல அடுக்கு பார்க்கிங் கட்டிடம் கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இந்த பணிகள் முடிந்ததும் பாண்டி பசார் சாலையில் எந்த வாகனமும் நிற்க அனுமதிக்கப்படாது என கூறப்படுகிறது.

வரும் 15ம் தேதி முதல் பாண்டி பசார் சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு, அண்ணா சாலை மார்க்கமாக மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.