தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை..


உத்திரபிரதேச மாநிலம் அக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.