தமிழக மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை : நிர்மலா சீதாராமன்..


கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை சுட்டத்தில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் கடலோர காவல் படை அதிகாரிகள் இந்தி தெரியாததால் தாக்கியதாகவும் குறிப்பிட்டனர்.
ஆனால் இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாமன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லையென்றார். அவர்களை சுட்டகுண்டு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.