தமிழகத்தில் ஒரே நாளில் 5,860 பேருக்கு கரோனா பாதிப்பு…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,641-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,72,251- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 54,213- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.