மொழிகளில் மூத்த தமிழை மடாதிபதி ஒருவர் அவமதித்துள்ளார்: பாரதிராஜா..


தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். வைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் தமிழுக்கு அவமதிப்பு ஏற்படும் போது குரல் கொடுப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மொழிகளில் மூத்த தமிழை மடாதிபதி ஒருவர் அவமதித்துள்ளார் என்றும் தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சனையில் சிக்கித் தவிப்பதாகவும் பாரதிராஜா கூறியுள்ளார்.