தமிழில் எழுதினால் பணத்தை வாரி வழங்கும் கூகுள்..

தமிழ் மொழியை கூகுள் நிறுவனம் அங்கீகரித்துள்ளால் தமிழில் எழுதப்படும் பிளாக் பதிவுகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் இந்தி மற்றும் வங்காளம் ஆகியவை மட்டுமே கூகுள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மொழியும் கூகுளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூகுளின் விளம்பரப் பிரிவான Google AdSense மற்றும் Google Ads ஆகியவற்றிலும் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழில் பிளாக் (Blog) எழுதுபவர்கள் அதனை Google AdSense ல் பதிவுசெய்ய வேண்டும். பின், அதிக வாசகர்களை ஈர்க்கும் வார்த்தைகளைக் கொண்ட படைப்புகளை எழுதி பிளாக் பதிவுகளாக வெளியாட்டால் Google AdSense பிளாகில் விளம்பரங்களை இடம்பெறச் செய்து வருவாய் ஈட்டித்தரும்.

கூகுள் நிறுவனம் பல்வேறு துறைகள் சார்ந்த விளம்பரங்களை பெற்று Google AdSense மூலம் பதிவுசெய்த இணையதளம், பிளாக் போற்றவற்றிற்கு அவற்றை வழங்குகிறது.

தமிழ் மொழி அங்கீகாரம் பெறாததால் இதன் மூலம் தமிழ் பிளாக், இணையதளம் நடத்துபவர்கள் அதிகம் பணம் சம்பாதிக்க முடியிவில்லை. இப்போது அந்தத் தடை விலகியுள்ளது.