தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவியை மிரட்டியதாக புகார் கூறப்பட்டதை அடுத்து தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவை தமிழிசை மற்றும்பாஜக,வினர் மிரட்டியதாக மாணவியின் தந்தை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து தமிழிசை உட்பட பா.ஜ.,வினர் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் வழக்குபதிவு செய்து அதன் விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 20-ம் தேதி க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.