தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கரூர், திருச்சி மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டையிலும் மிதமான மழை பெய்யலாம்.
புதுச்சேரி,காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பள்ளதாக தெரிவித்தள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அரபிக்கடலில் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு 7ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.