தமிழகத்தில் இன்று மேலும் 1458 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்துள்ளது. இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தோர் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 633 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,146 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது