தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1927 பேருக்கு கரோனா.தொற்று…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 16,667 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில், 6,09,856 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்திலுள்ள 1,897 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 30 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக இதுவரையில் இல்லாத அளவுக்கு 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 1008 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் மட்டும் 1,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 182 பேரும், காஞ்சிபுரத்தில் 33 பேரும், திருவள்ளூரில் 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.