தமிழகத்தில் இன்று புதியதாக 526 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 526பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை நகரில் மட்டும் இன்று 279 பேருக்கு பாதிப்பு. சென்னை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3330 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 219 பேர் குணமடைந்தனர் இதுவரை கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1824

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது