தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,800 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,02,283-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1021 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,985-ஆக அதிகரித்துள்ளது.