தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று,இடியுடன் கூடிய மழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கீழ்திசை காற்று வீசுவதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது எனவும் கூறியுள்ளது.