தமிழகத்தில் மேலும் 2115 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 41 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1322 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,327-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1630 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,271 ஆக அதிகரித்துள்ளது.