தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது.
தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 60 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,713 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,254-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 62-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 2,186 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் .

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,778–ஆக அதிகரித்துள்ளது.