தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 60-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,315-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1243 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,371-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 3,391 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் .

தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,807-ஆக அதிகரித்துள்ளது.