தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு…

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

எனினும், கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.

தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 27 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 400 பேருக்கு நோய் தொற்று இருக்கிறது.

தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதுபோல் 10 வயதிற்குட்பட்ட 4 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது

கரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர் இதோடு சேர்த்து 20 பேர் இதுவரைஉயிரிழந்துள்ளனர்.

இந்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.