தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் இன்று மேலும் 110 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,571-ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,21,087-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.