தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், மாநிலத்தில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி இருப்பதாகக் கூறினா். இதனால் தற்போது அங்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர்  ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

 

Tamilnadu Byelection date will be announced back: EC