தமிழகத்தில் நேற்று (டிச. 05) வரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 920 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 12 ஆயிரத்து 345 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதன செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 10 ஆயிரத்து 882 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7 லட்சத்து 66 ஆயிரத்து 261 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 777 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
