தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்வு:

தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் மேலும் 66 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,032-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1140 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 3,035 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,567-ஆக அதிகரித்துள்ளது.