தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 4,985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கரோனாவில் இருந்து இதுவரை 1,21,776 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3,861 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 2,551- ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இன்று 70 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 7 பேர் எந்தவொரு அறிகுறியின்றி உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,298 பேர் கரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 112 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 51,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 19,06,617 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 65 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.93% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52,087 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 4,985 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,06,828 ஆண்கள், 68,827 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.