தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2396 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 704 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் 64 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 56,845 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 85 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,186 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 8,61,211 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்று சென்னையில் 30 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 24 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்..

இன்று ஒரே நாளில் 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமானவர்கள் எண்ணிக்கை 31,316 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 24,822 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.