தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,383-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5,30,708- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,306- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.64 லட்சத்தை கடந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1283 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164744-ஆக அதிகரித்துள்ளது.
