தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்வு! ..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 67 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,099 -ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,078 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,662-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 4,743 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,310-ஆக அதிகரித்துள்ளது.
மதுரை – 450
விருதுநகர் – 328
திண்டுக்கல் – 157
அதிகரித்து தொற்று பாதிப்படைந்துள்ள மாவட்டங்களாகும்