தமிழகத்தில் இன்று புதிதாக 5,516 பேருக்கு கரோனா தொற்று: 60 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,811-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,86,479 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 46,703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தை கடந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 996 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,55,639-ஆக அதிகரித்துள்ளது.