தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 60 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 2393 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,969-ஆக அதிகரித்துள்ளது.

மிழகத்தில் இன்று 2,325 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,327-ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 60 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201-ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.