தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி..

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழத்தில் இதுவரை இல்லாத அளவாக 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 2,20,716ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,571 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில், 1,138 பேருக்கும், செங்கல்பட்டில் 448 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 362 பேருக்கும், திருவள்ளூரில் 474 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,723 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62.249-ஆக அதிகரித்துள்ளது.