தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம்: மின்சார வாரியம்..

கரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் அமல்படுத்தியதால் மின்கட்டணம் செலுத்த மின்சார வாரியம் கால அவகாசம் அளித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த வரும் 15-ம் தேதிக்கு பிறகு காலநீட்டிப்பு வழங்கப்படமாட்டாது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது.