தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதி அரேபியாவில் சிறைபிடிப்பு..

சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது

பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேர் சவுதி கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சவுதி அரேபியா கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த மீனவர்களை கைது செய்தனர்.