ஈரானில் தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு..


துபாயில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 6 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுர மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடியைச் சேர்ந்த 5 பேரும் குலசேகரப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரையும் கைது செய்து ஈரான் கடற்படை சிறையில் அடைத்தது.

இதையடுத்து அவர்களை மீட்கக்கோரி அவரது குடும்பத்தினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.