தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை படகுடன் சிறைபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியத்தை தொடர்வதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.