தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது ..

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடையும் நிலையில், இன்று வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாக உள்ள நிலையில் வேட்பாளர்கள் பலர் இன்று மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மத்திய சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நாளை மாலை தெரியவரும் எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன என்பது