மழை வேண்டி தமிழக கோவில்களில் அ.தி.மு.க.வினர் யாகபூஜை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் மழை வேண்டி நடத்தப்பட்ட யாகபூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மழைவேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள், இன்று யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் செங்கோட்டையன் மழை வேண்டியும் வருண பகவான் அருள்வேண்டியும் யாகபூஜையில் ஈடுபட்டார்.

ஐந்துக்கும் மேற்பட்ட வேத ஓதுவார்களைக் கொண்டு பூரண கும்ப கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைபெற்றது.

முதலில் விநாயகர் பூஜையும் அதனை தொடர்ந்து முருகன் அருள்வேண்டி சிறப்பு பூஜைகளும்,

அதன்பின்னர் வருணபகவான் மழை வேண்டி யாக வேள்வியில் நவதானியங்கள் செலுத்தியும் பூரணாதிதி செலுத்தியும் யாகவேள்வி நடைபெற்றது.

மதுரை

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மழை வேண்டி அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா வருண யாகம் நடத்தினார்.

யாகத்தில் ராஜன் செல்லப்பா உடன், மேலூர் எம்.எல்.ஏ.பெரிய புள்ளான் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.