தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 56-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1157 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82128-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 69 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236-ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,106 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் .தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,416-ஆக அதிகரித்துள்ளது.