தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 1,372 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று ஒரு நாளில் மட்டும் 5,363 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தார். இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.

அதிகபட்சமாக இன்று திருப்பூரில் 28 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.