தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,697 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5697 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 5697 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,735 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் 40 பேர், தனியார் மருத்துவமனையில் 28 பேர் என 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை வரை 8,502 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 80,623 மாதிரிகளும், 78,711 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 60,48,832 மாதிரிகளும், 58,58,300 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.