தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி :சுகாதாரத்துறை..

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,45,859 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,38,871 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,968-லிருந்து 35,747-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,57,805-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,45,318 உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • தமிழகத்தில் கரோனாவில் இருந்து இதுவரை 1,83,956 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,778 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

  • தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,935 – ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் இன்று 97 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013 பேர் கரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 99,794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 120 மையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 57,968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 25,60,269 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 58.99% ஆக உள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,276 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,881 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,49,107 ஆண்கள், 96,725 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;