தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி …

தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை 1,56,526 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 85 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐ கடந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 94,695 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆகவும் உயர்ந்துள்ளது.