தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

 

நாகை மாவட்டம் சீர்காழி,தரங்கம்பாடி,மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

விழுப்புரம் மாவட்டம் ஆசனூர் திருநாவலூர், உளூந்தூர்ப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

திருச்சியில் திருவெறும்பூர், அரியமங்கலம், காட்டூர், நாவல்பட்டு, துவாக்குடியில் மழை பெய்தது.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், வடபாதிமங்கலத்தில் கனமழை பெய்தது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி, கீரமங்கலம், வடகாடு, மழையூர், கரம்பக்குடியில் மழை பெய்தது.

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்பகோணத்தில் விட்டு விட்டு கனமழை பெய்தது.