தமிழகம், புதுவையில் மழை தொடரும் :சென்னை வானிலை ஆய்வு மையம் …

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும், நாளையும் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தமட்டில் மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்கிறது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.