தமிழகத்தில் மீண்டுமொரு பேனர் உயிரிழப்பு..

தமிழகத்தில் மீண்டுமொரு பேனர் உயிரிழப்பு கொடூரம் நிகழ்ந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே, அதிமுக பிரமுகர் வைத்த பேனர் விழுந்ததில் பைக்கில் சென்ற 23 வயது சுபஸ்ரீ நிலைதடுமாறி தண்ணீர் லாரியில் விழுந்தார்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ உயிரிழந்தார்.