தஞ்சை பெரிய கோயில் குடமுழக்கு : தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்த அனுமதி..

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழக்கு விழா வரும் பிப்ரவரி-5 ந்தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குடமுழக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.