ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அவகாசம் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு..

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்து டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது.

இறுதி நாளான இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் முடங்கியதால் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.