தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில்கள்…

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பழனிக்கு செல்வதால், மதுரை-பழனி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி மற்றும் ஜனவரி 21ஆம் தேதி இயக்கப்படுகிறது.

ஜனவரி 20ஆம் தேதி, மதுரையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயிலானது, 11.45 மணிக்கு பழனி சென்றடையும்.

அதேபோல், மறுமார்க்கத்தில் ஜனவரி 21ஆம் தேதி பழனியிலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ரயில், 10.15 மணிக்கு மதுரையை வந்தடையும் என தெற்கு ரயில்வேயின் மதுரை மண்டலம் அறிவித்துள்ளது