நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி 42 ராக்கெட்: இன்று தொடங்குகிறது கவுன்ட் டவுன்

இங்கிலாந்தின் இரண்டு செயற்கைக் கோள்கடன் ஞாயிற்றுக் கிழமை விண்ணில் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. அதற்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நோவா எஸ் ஏ ஆர் மற்றும் எஸ்1- 4 என்ற இரு செயற்கைக் கோள்களையும் இந்தியா வணிக நோக்கில் விண்ணில் ஏவ உள்ளது. இதில் 445 கிலோ எடை கொண்ட நோவா எஸ் ஏ ஆர் செயற்கைக்கோள், இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், பனிப்படலம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிக்காக அனுப்பப்படுகிறது.

இதேபோல் 444 கிலோ எடை கொண்ட எஸ்1 – 4 என்ற செயற்கைக் கோள் பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக அனுப்பப்படுகிறது. இந்த இரு செயற்கைக் கோள்களும் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் மூலமாக ஏவப்பட்டு பூமியிலிருந்து 583 கிலோ மீட்டர் தூரத்தில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த செயற்கைக் கோள்கள் இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44 வது பிஎஸ்எல்வி ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக் கோள்களை செலுத்துவதற்கான 32 மணி நேரம் 37 நிமிடங்களுக்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை இரவு 10.07 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

The launch of PSLV-C42 is scheduled Tomorrow