திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் திமுக ஊராட்சிசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

திமுக சார்பில் ஜனவரி 9 முதல் தமிழகமெங்கும் கிராம ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் திமுக சார்பில்  ஊராட்சிசபை கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு  அவர்களிடையே உரையாற்றினார்.